சினிமா செய்திகள்

சூர்யா, துல்கர் சல்மான் இணைந்து நடிக்கப்போகும் புதிய படம்! யார் இயக்குநர் தெரியுமா?

நடிகர் சூர்யா, மலையாள நடிகர் துல்கர் சல்மான் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தேசிய விருது வாங்கிய இயக்குநர் இயக்கவுள்ளார்.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

‘கங்குவா’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் மற்றும UV கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் நிலையில் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சரித்திர கால படமாக உருவாகிவரும் இப்படம் 3D தொழில்நுட்ப முறையில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், இப்படத்தில், பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், நடிகர் சூர்யா, நவம்பர் மாதத்திற்குள் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சூர்யா 42’ படமாக ‘கங்குவா’ உருவாகிவரும் நிலையில், அடுத்து ‘சூர்யா 43’ படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘சூர்யா 43’ படத்தில் நடிகர் சூர்யா, மலையாள நடிகர் துல்கர் சல்மான் இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதாகவும், ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா, ‘சூர்யா 43’ இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் ‘சூரரைப் போற்று’ படம் பல தேசிய விருதுகளைக் குவித்த நிலையில், தற்போது அந்த கூட்டணியில் மலையாள ஸ்டார் துல்கர் சல்மானும் இணைந்தால் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *