சினிமா செய்திகள்

சூர்யாவைக் கவர்ந்த அன்புச்செல்வன்!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளியான திரைப்படமான காக்க காக்க திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆனதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, அப்படத்தின் நினைவாக அரிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களை இருக்கையை விட்டு நகராதபடி, கூடவே அழைத்துச் செல்லும். அதற்கேற்றாற்போல், கதையை மாறுபட்ட கோணத்தில் நகர்த்தி வெற்றி பெற்றுவிடுவார்.

மின்னலே ஆரம்பித்து இன்றைய வெந்து தணிந்தது காடு வரை ரசிர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய படங்கள் ஏராளம்.

அந்தவகையில் அவர் இயக்கிய 2வது தமிழ்படம்தான் காக்க காக்க. இப்படத்தில் சூர்யா அன்புச்செல்வன் கதாபாத்திரத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க, ஜீவன், டேனியல் பாலாஜி, தேவதர்ஷினி, கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலரும் நடித்திருந்தனர்.

குற்றங்களை எதிர்த்துப் போராடும் காவல்துறை அதிகாரிகளின் சிறப்புப் பிரிவில் பணியாற்றும் அன்புசெல்வனுக்கும், சென்னையை ஆட்டிப் படைக்கும் கேங்ஸ்டர் கும்பலுக்கும் இடையே நடக்கும் கதைதான் காக்க காக்க.

அதிரடி, ஆக்ஷன், த்ரில்லர், காதல் என எதற்கும் பஞ்சமில்லாமல் கதையை அழகாக நகர்த்தியிருப்பார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அற்புதம்.

இப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் ப்ளாக் பஸ்டர் வெற்றியையும் கொடுத்தது.

இந்நிலையில், 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி இப்படம் வெளியான நிலையில், இன்று 20 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது.

இதை நினைவு கூறும் விதமாக நடிகர் சூர்யா காக்க காக்க படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, அன்புச்செல்வன் கதாபாத்திரம் தன் மனதிற்கு மிக நெருக்கமானவர் என கூறி அப்படத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *