விளையாட்டு செய்திகள்

சாதனை படைத்த ஜெய்ஸ்வல், ரோஹித் சர்மா ஜோடி!

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் ஷர்மா ஜோடி 229 ரன்கள் அடித்தன் மூலம் புதிய சாதனை சாதனை படைத்துள்ளனர்.

தற்போது நடந்துவரும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் ஆரம்பித்த நிலையில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்களை எடுத்து விளையாடி வரும் நிலையில், தற்போது 162 ரன்கள் முன்னிலை வகுத்துள்ளது.

இப்போட்டியில், துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த நிலையில், 229 ரன்களைக் குவித்தனர். இதன்மூலம் ஆசியாவிற்கு வெளியே நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக, இந்த ஜோடி தொடக்கவீரர்களாக களமிறங்கி பார்ட்னர்ஷிப்பில் 229 ரன்களைக் குவித்து, அதிக ரன்களைக் குவித்த ஜோடி என்ற சாதனையைப் படைத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக 1979ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சேத்தன் சௌஹான் மற்றும் சுனில் கவாஸ்கர் ஜோடி எடுத்த 213 ரன்களே, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *