சினிமா செய்திகள்

‘லியோ’ படத்திற்காக வெளிநாட்டிற்கு செல்லும் லோகேஷ் கனகராஜ்! எதுக்கு தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் சில வேலைகளுக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 2வது படம்தான் ‘லியோ’. இப்படத்தில் இரண்டு வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில், நடிகர் விஜய்யுடன், த்ரிஷா, சஞ்ஜய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சான்டி என பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய், கடந்த மாதமே படப்பிடிப்பில் தன்னோட காட்சிகளை நடித்து முடித்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங் வேலையில் ஈடுபட்டு, தற்போது அவர் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் படத்திற்கான பேட்ச் ஷூட் பணிகளும், அதைத் தொடர்ந்து முழுக்க முழுக்க போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே வீட்டா ஸ்டுடியோஸ், அனிமல் லாஜிக், மகுடா மற்றும் டிஜிட்டல் டொமைன் ஆகியவற்றுடன் VFX பகுதிகளை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.

இதன்காரணமாக, விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைக்காக லோகேஷ், வெளிநாடு செல்லவுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் ஆகஸ்ட் மாத இறுதியில் முடிவடைந்து, ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எல்லா வேலைகளும் முடிந்து, ‘லியோ’ படம், அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *