அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது உண்மையா? நிலவரம் என்ன?
நடிகர் அஜித் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்ததாக ஒரு செய்தி ஊடகம் மற்றும் சமூகவலைதளத்தில் வேகமாக பரவிவரும் நிலையில், இச்செய்தி உண்மையில்லை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் நிலையில், இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்லவிருந்தார்.
இதையடுத்து, நேற்று அஜித் திடீரென உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது மூளையில் சிறிய கட்டி இருப்பதாகவும், அதற்கான அறுவை சிகிச்சை தற்சமயம் நடந்துவிட்டதாகவும் ஒரு செய்தி, ஊடகம் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
![](https://inayaseithi.com/wp-content/uploads/2024/03/ajith.jpg)
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இச்செய்தி உண்மையில்லை என அஜித்தின் மானேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நடிகர் அஜித் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்ற நிலையில், அவருடைய காதின் கீழ் நரம்பில் சிறு வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதை அரை மணிநேரத்தில் சரிசெய்து சிகிச்சையை முடித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நேற்றிரவே அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளார்.
வேறு எந்த பிரச்சினையும் நடிகர் அஜித்துக்கு இல்லை என அவர் கூறியதையடுத்து, அஜித் குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு தற்சமயம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.