விளையாட்டு செய்திகள்

2வது இன்னிங்ஸில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அபாரம்!

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கான டெஸ்ட் தொடரின் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன் இருவரும் அரைசதம் அடித்தனர்.

தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருஅணிகளும் விளையாடி வரும் நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகித்து வருகிறது.

இதையடுத்து தற்போது 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கிய நிலையில், ஆரம்பத்தில் இருந்தே டி20 போட்டி போல் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்.

இருவரின் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து, ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 11.5வது ஓவரில் 98 ரன்களை எட்டியபோது ரோகித் சர்மா 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

இதையடுத்து, அணியின் ஸ்கோர் 102ஆக இருந்தபோது ஜெய்ஸ்வால் 38 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, இறுதியில் சுப்மன் கில், இஷான் கிஷன் இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சுப்மன் கில் 29 ரன்களும், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 52 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருக்க, இந்திய அணி 181 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

ஏற்கெனவே முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் முன்னிலை வகித்த இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு டிக்ளேர் செய்ததையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கிய நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த டெஸ்ட் தொடரை சமன் செய்யவேண்டுமென்றால் இந்த டெஸ்ட் போட்டியில் ஜெயிக்க வேண்டும். அதற்கு இன்னும் 289 ரன்கள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *